Sunday, December 16, 2007

அதே காதலுடன் நான் ...!!!

செல்ல நாய்க் குட்டிக்கு கூட
கழுத்து சங்கிலியிட்டு
அழகு பார்த்ததில்லை நான் ...!!!

கவிதைகளில்
'என்னவள்' என்ற சொல்லில் விட
'நீ' என்பதிலேயே அழகாய் நிறைகிறாய் - நீ ..!!

காதலை
கேள்விக்குறியாக்கவில்லை உன்னிடம் ...
மெளனத்தை
மொழிப் பெயர்க்கவில்லை நான் ...
அதன்
அர்த்தங்களை காலம் சுமக்கட்டும் ...!!!

மற்றொரு விடியல்
நிற்க்காமல் தொடரும் நடை பயணம் ...
நின்று ரசித்த
இயற்க்கையின் அசைவுகளியெல்லாம் - நீ
அன்றும்
அதே காதலுடன் நான் ...!!!

No comments: