Wednesday, August 23, 2006

விடுமுறைவிட்ட மழை ...!

இன்று
வானிலை அறிக்கையாக
தன் விடுமுறையை அறிவித்து விட்டு
சென்றது மழை - இருந்தும்
துவட்டிய உன் கூந்தலில் இருந்து
விழுந்த துளிகள் தரும்
எனக்கான மழையை ..!

./பழனி

Friday, August 11, 2006

கவி.. தா .. ?!

பெண்னே ..!
உன்னை படைத்த
ஆணவத்தில் - பிரம்மன் ...

"என்
கவியே இனி - கவி
தா .. ?!" என்றான்,

நானும்
"இனி என் கவியே ..
கவிதா .. !! " என்றேன்.


./பழனி

குறிப்பு : "கவிதா" என்னும் பெயர் கற்ப்பணையே ... சொற்சுவைக்காக சேர்க்கபட்டவையே ..!! ;-)

Tuesday, August 08, 2006

தஞ்சையில்...தலைக் கவிழ்ந்தேன் ..

தஞ்சை
பெரிய கோயிலை - என்னுடன்
சுற்றினான் ஒரு வெள்ளையன்

அவன்
எந்நாடு என்று நானறியா - இருந்தும்
என்னாட்டுக் கலை கண்டு
வாய்ப்பிளந்த போது
எனக்குள்
ஒரு இராஜராஜன் பெருமிதத்தோடு ...

வானுயர்ந்த கோபுரம் போல்
என்னாடே உயர்ந்தது என்று
தலைநிமிர்ந்து திரும்பினேன் ...

கோயில் தலைவாசலில் - அந்த
அந்நியனைச் சுற்றி ஒரு எம்மக்கள்
இரு கைகள் எந்தி யாசகம் கேட்டு ...

சற்று முன்
தலைக்கேறிய தலைக்கணத்தில்
தலைக் கவிழ்ந்து நடந்தேன் ...

ஒர்
ஏழை இந்தியனாக
ஏழ்மை கேள்விகளுக்கு
விடைத் தேடி ... !!!

./பழனி

Monday, August 07, 2006

என் விழிகளில் பார் ...!!!

கண்ணாடியில்
உன் பிம்பத்தை விட - நீ அழகு
பிதற்றல்யில்லை !!
ஒரு முறை உன்னை - என்
கவிதைகளில் பார் ...
இன்னும் சந்தெகம் என்றால்
என் விழிகளில் பார் ...!!!