Thursday, November 16, 2006

மழைக்கால கவிதைகள் ... 1

உன் நெற்றி மீது விழுந்து
இதழ் வழி செல்லும் - ஒரு
துளி மழை - என்
நாவின் தாகத்திடம் விலை பேசியது ...!

உன்
விழிகளை
புதிய மீனினம் என்று ...!
கடல் விட்டு ஓடி வந்தது
மழை ...!!

உன்
இதழின் ஈரம் கண்ட
மேகங்கள் தாகம் தீர்க்க
மழை மழையாய் பொழிந்தது
உன்னை தேடி ...

தினமும்
நிலவை ரசித்து அலுத்த
விண்மீன்கள்
இன்று உதிர்ந்து விழுகிறது - மழைத்துளிகளாய் ...
பூமியில் என் நிலவைத் தேடி ...!

மழையில் நனையாதே
உன் அழகில்
நனைந்து நின்று விடப் போகிறது
மழை ...!

மழையில்
நீ நனையும் அழகை பார்த்து ...
உறுகி
உரைந்து
உடைகிறது - ஆதவன்
ஆலங்கட்டி மழையாய் ...!

மழையில்
உன் அழகை ரசித்த மேகம்
மழைத்துளிகளின் விழிகளில்
ஞாயிறின் கரங்களால் எழுதியது
வானவில் - என்னும் கவிதையை ...!!!

தனக்கும்
உன் கூந்தலின்
நிறம் வேண்டுமாம் ...
மழையாய் அழுதுவிட்டு
மறைந்தது - வானவில் ...!

இன்று
வானிலை அறிக்கையாக
தன் விடுமுறையை அறிவித்து விட்டு
சென்றது மழை - இருந்தும்
துவட்டிய உன் கூந்தலில் இருந்து
விழுந்த துளிகள் தரும்
எனக்கான மழையை ..!

./பழனி