Thursday, April 19, 2007

மழைக்கால கவிதைகள் ... 2

தினமும்
வாசல் தெளித்து
கோலமிட்டு அதன் அழகை
நீ ரசித்திருப்பாய் ....
உன்னையே மழையால் நனைத்து
அந்த கோலத்தை ரசித்து
சென்றது மேகம் ...!!!


கொளுத்தும் வெயில்
நெற்றியில் தோன்றி
கழுத்து வழி இறங்கும்
ஒரு துளி வேர்வை - என்
கோடை கால மழையாக ...!!!

இரவில்
நிலவை ரசிக்க வந்த உன்னை
மின்னலின் ஒளியில் கண்ட
மேகங்கள் - இடியென முழங்கியது
மழை மழையாய்க் கவிதைகள் ...!!!


இத்தனை அழகும்
மெய்யோ இல்லை பொய்யோ என்று
மெய் தேடி பெய்த மழைத்துளிகள் ...
மெய் சிலிர்த்துக் கொண்டன - உன்
பொன் மேனித் தொட்டவுடன் ...

உன் அழகை
என் பேனாவின் மைத்துளி
எழுதும் முன் ...
உன்னில்
வரைந்து விடுகிறது மழைத்துளி
நான் எழுத வந்த கவிதையை ...!!!

உன்னை
தேடி வரும் ஒவ்வொரு மழைத்துளியும்
ஒவ்வொரு கவிதை என்றால் - இன்றும்
நான் முடிக்கவில்லை - இந்த
" மழைக்காலக் கவிதையை ..."

./பழனி