Monday, October 22, 2007

என் நிகழ்காலத்தின் தவம்

தேம்ஸ் நதிக்கரையில் கரையெதிங்கியது
என் நிகழ்காலம் ...

நாட்கள் என்னை கடக்கவில்லை
நாட்களை எனக்குள் கடத்திக் கொண்டுயிருக்கிறேன்...

இங்கே
போதி மரம் கிடைக்கவில்லை - ஆனாலும்
நான்
என் தவத்தை கலைக்கவில்லை ..

என் சுவசத்தின் சுகந்திரம் - அது
உன் சுவத்தொடு மட்டும் தான் ...

உன் தாவணி
என் தேசியக் கொடி
உன் மெளனத்தின் மொழி
என் தேசிய கீதம் ...

உன்னை முதன்முதலாய் பார்த்த நாள்
என் நினைவில்லை - பின்
உன்னை பார்த்த ஒவ்வெரு நாளும் கூட
என் நாள் குறிப்பில் இல்லை - ஆனால்
இன்று
எதிர்க் காலத்தில் தேடுகிறேன் ...

தேடல்
அது காதலில் மட்டுமில்லை ...

மெய் ஒன்று உரக்க சொன்னால்
உன்னில் இருந்த போது உணரவில்லை
இன்று
கடல் கடந்துதான் என்னை கண்டெடுத்தேன்
ஒர் இந்தியனாக ...

./பழனி