Monday, July 17, 2006

நீ.. நான்.. என் கவிதை ..

நீ
அங்கங்கே விட்டுச் சென்ற - மௌனங்கள்
நான் கோர்த்தால்
அது ஒரு கவிதை ...

நான்
எழுதிய கிறுக்கல்கள்
நீ
படித்தால்
அதுவும் ஒரு கவிதை ..

காலையில்
நீ என் மீது உதிர்த்த புன்னகை
இரவில்
தூங்கும் போது நினைக்கையில்
பிறக்கும் ஒரு கவிதை ..

மாலையில்
தனிமை கையில் சறுகாக என்றோ
நீ சூடிய பூ
அதன் வாசம் நுகர்ந்து - நான்
என் வசம் இன்னொரு கவிதை ..

நெற்றி மீது ஒரு துளி வேர்வை
நாவின் நூனி வரை தாகம்
தாகம் தீரும் முன்
பிறக்கும் ஒரு கவிதை ..

பிரம்மன் ஏதோ
ஒரு மொழியில் வரைந்த - உன்னை
என் தமிழால் மொழி பெயர்த்தால்
பிறக்கும் இன்னோரு கவிதை ..

கோயிலில்
நேர் எதிரில் - நீ
என் பிரத்தணையிலும் - நீ
இரு புருவங்களுக்கிடையில் சிறு குங்குமம்
அழகு என்று மனம் சொல்லும் முன்
என் தமிழ் சொல்லும் ஆயிரம் கவிதை ..

மார்கழி பனியில்
ஐந்தரை மணியில் - நீ
கோலமிட்ட கோலம்
கோலமாகவே என் நாற்குறிப்பில்
என்றென்றும் கவிதையாக ..

நினைவுகளில் நிறைந்தும் ஏங்கோ - நீ
உன் மௌனம் போல் தனிமை
கனவுகளுக்கு பதிலாக உன் நினைவுகள்
உனை காண காத்திருக்க
காத்திருந்த்க் காலங்கள்
நிகழ்கால கவிதைகளாக ..

வழியில்
உன்னை போல் உன்னோருத்தி
கண்கள் திரும்பி பார்க்க
அதில் ஆர்ச்சர்யமில்லை
ஆனால்
அது பிரம்மனின் படைப்பில்
அது சாத்தியமில்லை - இது
மனம் சொல்லும் கவிதை ..

வானில் வானவில்
தோகை கூந்தல் அவிழ்த்து - நீ
அதனை தலாட்டும் என் கண்கள்
அன்று நீ ரசித்த வானவில்
இன்றும் நிறம் மாறாமல் - என் கவிதைகளில் ..

ஏனோ
என்னை கவிஞனாக்கும் - உன் முயற்சி
வார்த்தைகள் தடுக்கும் உன் அழகு - இருந்தும்
உன் பெயர் மட்டும் சொல்லி
தப்பிப் பிழைக்கும் ஒரு கவிதை ..

கோடை
உன் வேர்வை தேடி
உன் இடைக்கும் நெற்றிக்கும் பயனித்த
உன் கைக்குட்டைஎன்னிடம் சொன்னவை
இங்கே மழைக்கால கவிதையாக ..

(ஒரு தீபாவளியில்)
வானில் நிலவுமில்லை
எனக்கின்னும் ஓர் விடியலுமில்லை
ஊரெல்லாம் ஒளியும் ஒலியுமாக
நான் மட்டும் ஒதுங்கி நின்றேன்
உன் வருகைக்காக ..
பாதத்தின் ஓரத்தில் மருதாணி
பச்சைப் பட்டு தாவணியில் - நீ
இடையில் இடையின் இடை
என்றும் மூன்றாம் பிறையாக ..
இரு கைகளில் ஏந்திய தீபம் - அதன்
ஒளியில் உன் முகம்
பௌர்ணமியாக தோன்றும்
இன்னோரு கவிதை ..

.....
.....
.....

முடியாத கவிதையிது
முடிக்க வேண்டும்
உன் பெயர் சொல்லி - உன்னை
நினைக்காத நாளன்று .. !

3 comments:

Anonymous said...

பிரம்மன் ஏதோ
ஒரு மொழியில் வரைந்த - உன்னை
என் தமிழால் மொழி பெயர்த்தால்
பிறக்கும் இன்னோரு கவிதை ..

enaku piditha varigal..

-Nathi.

Moorthy S Venkatraman said...

//
முடியாத கவிதையிது
முடிக்க வேண்டும்
உன் பெயர் சொல்லி - உன்னை
நினைக்காத நாளன்று
//

மிக அழகான வரிகள்!!

- மூர்த்தி

Likemystatus.in said...

அருமையான கவி வரிகள்...