Monday, May 08, 2006

நீ - என் கடவுளென்றாலும் சரி ...!!!!

இந்த கவிதை எழுதிய நாள் 16 ஜுலை,2004, அன்று தான் கும்பகோணம் பள்ளி தீவிபத்து நடந்தது ... தொலைக்காட்சி செய்தியில் பார்த்த பொழுது, எனக்குள் தோன்றிய கோபம் கடவுளின் மீது மட்டும் தான் ... அந்த ஒரு நாள் நாத்திகனின் கிறுக்கல்கள் இவை ...

ஏய்! மேகங்களே
அழுதிட கற்றுக் கொள்ளுங்கள் - மழலைகள்
அழுகை கேட்டு
அழுதிட கற்றுக் கொள்ளுங்கள் ...!
அன்று உங்கள் கண்ணீர் தூளிகள் போதுமே
அந்த
அக்னியின் கொட்டத்தை அடக்க ...!

வெண்தாமரையாழ்(ள்) !
உன் வீட்டில் தானே நடந்தது
அக்னியின் அத்துமீறல்
காத்திட மனமில்லையோ ...
கல்லில் மனம் கல்லானதோ ? - அங்கே மழலைகள்
கரிக்கட்டைகளாகும் பொழுது ...!

கோணத்திற்கு எத்தனை கும்பம்
அதற்கு கீழ் எத்தனை உருவங்களில் - நீ
பூக்களை கொண்டு தானே பூஜித்தோம்
அப்பூக்களை அக்னி புசிக்க
கைக்கட்டி நின்றது ஏன் ... ?

உன் பதில்...
விதி என்றாலும் விடுவதற்கில்லை ...
நெற்றிக் கண் பிழையென்றாலும் மன்னிப்பதற்கில்லை ...
நீ - என் கடவுளென்றாலும் சரி ...!!!!

1 comment:

Anonymous said...

Simply Superb palani...
prabu..