Sunday, May 07, 2006

தாயை மீறிய தாய்மை .... !!!

அம்மாவுக்கு ஒரு வாய்
அம்முவுக்கு ஒரு வாய் - என்று
அமுதூட்டினாள் அம்மா ...

பாப்பாவுக்கு என்று
கையிலிருந்த பொம்மையை காட்டியது குழந்தை ..!
தாயை மீறிய தாய்மை .... !!!

11 comments:

ப்ரியன் said...

வணக்கம் பழனிவேல்...ப்ரியா வழியாக உங்களின் இக்கவிதை வாசிக்கக் கிடைத்தது மிகவும் அருமை...ஒரு கணம் வார்த்தை இல்லாமல் விக்கித்துப் போனேன்...மிகவும் அருமை தொடருங்கள் உங்கள் கவிப்பணியை

Anonymous said...

தொட்டது என் மனதை... மோகன் R

பழனி said...

மிக்க நன்றி ... பிரியன் & மோகன்

Raghavan alias Saravanan M said...

பழனி..

மிக அருமையான கவிதை..

குழந்தையிடமும் தாய்மையைக் கண்ட தங்களின் கவி உள்ளமும், கற்பனை வளமும் ஏற்றமோடு விளங்க என் மனதார்ந்த பாராட்டுக்கள் மற்றும் வாழ்த்துக்கள்..

தோழமையுடன்,
இராகவன் என்ற சரவணன் மு.

பழனி said...

அன்பின் ராகவன் அவர்களுக்கு,

தங்களின் அன்பான கருத்துக்களை என் வலைப்புவில் அலங்கரித்தற்கு மிக்க நன்றி ...

அன்புடன்,
./பழனி

கைப்புள்ள said...

மிக அருமையான கவிதை பழனி அவர்களே!

மிகவும் ரசித்தேன். பாராட்டுகள்.

Anu said...

wow so simple and yet..so nice...

Anonymous said...

Really nice. SOmething touch me. Thanks. Keep it up.

நாமக்கல் சிபி said...

அருமையான பார்வை!

Vijay said...

very nice poems..fantastic imagination..keep going

Moorthy S Venkatraman said...

உணர்வுப்பூர்வமான வரிகள்!!